ஆப்தரக்ஷகா | கன்னடம் | 'வேட்டையன்'
7:15:00 PM



படத்தின் கதைக்கு வருவோம்
ரமேஷ்('தமிழில்' செந்தில்நாதன்) - கங்கா பங்களாவிலிருந்து நாகவள்ளி வெளியேறி, எந்தப் பிரசனையும் இல்லை என்று தெரிகிறது. ஆனால் அதே சமயம் அந்த நாகவள்ளியின்(சந்திரமுகிகாரு) சித்திரம் ஒரு ஏழை ஓவியருக்கு வண்டிப்பாதையின் வழியில் கிடைக்கிறது. பிரமாதமாக வரையப்பட்டிருக்கும் அந்த ஓவியத்தை அவர் பொக்கிஷமாக பாதுகாக்க நினைக்கிறார். ஆனல் அந்த ஓவியரின் மனைவியோ "அதை விற்று பணமாக்கு இல்லையென்றல் பிணமாகு" என்று கோபமாய்க் கத்த, மறுநாள் காலை ஓவியர் வாயில் ரத்தம் கக்கி இறந்துகிடக்கிறார். ஓவியம் விற்கப்பட்டு, ஒரு நடன போட்டியில் தன் கணவனுடன் ஆடி வெற்றிபெற்ற சரஸ்வதிக்கு பரிசாகக் கொடுக்கப்படுகிறது.







8 comments
P. வாசுவை எப்படிங்க டைரக்டரா ஏத்துக்கறது??
ReplyDeleteஆனாலும்.. தலைவர் நடிப்பாரா? ஏற்கனவே.. குசேலன்ல வாங்கின அடி நினைவிருக்குமே..?
//P. வாசுவை எப்படிங்க டைரக்டரா ஏத்துக்கறது??//
ReplyDeleteவழிமொழிகிறேன் . .பீ வாசுவை ஒரு இயக்குனராக நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இருந்தாலும், வேட்டையனாக தல நடித்தால் வெற்றி நிச்சயம்தான். ரஜினியே இப்படத்துக்கு 'வேட்டையன்' என்று பெயர்வைத்து எடுக்கும்படி அட்வைசினார் என்று வாரமலரில் படித்தேன் . .பார்ப்போம் . .
பை தி வே - விமர்சனம் நல்லா இருந்திச்சு . .சுவாரஸ்யம். ரசிச்சி படிச்சேன் . .
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteவிறுவிறுப்பான விமர்சனம். ரஜினி அந்த வேடத்தில் நடிக்காவிடில் அதற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள்? நண்பர் கருந்தேளை விட்டால் வேறு யாருமில்லை என்றே எண்ணுகிறேன் :)
ஆஹா . . . நமக்கு இந்த மாதிரி வேட்டையன் ரோலெல்லாம் வேண்டாம் . .ஹாலிவுட் சைக்கோ கில்லர் வேடமே எனக்குச் சிறந்தது . . :-)
ReplyDelete@பாலா, கருந்தேள், காதலன் - வருகைக்கு நன்றி நண்பர்களே...
ReplyDelete'பீ'.வாசு மேல் எனக்கும் அப்படி ஒன்றும் பெரிய அபிப்ராயமோ எதிர்பார்ப்போ இல்லை. ஆனாலும் வால்டர் வெற்றிவேல், சேதுபதி I.P.S, சின்னதம்பி, மன்னன் படங்களை மறக்கமுடியாது. ஆப்தரக்ஷகா கதை மெய்யாலுமே சூப்பர்... ஆச்சரியப்பட்டுப் போனேன். அண்ணாமலை காலத்திலிருந்தே 'இது என் கடைசி படம்'னு தலைவர் பேட்டி கொடுத்துக்கிட்டே இருக்காரு... ம் ம் ம் நடக்குமா அதெல்லாம்...? வேட்டையன் தரிசனம் நிச்சயம் உண்டு...
நீ எழுதுறதுல நிறைய வளர்ச்சிக்கான மாற்றம் தெரியுது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇந்தப் படம் தமிழில் வராது, வரவே வராது, பூஜையெல்லாம் போட்டு தலைவர் பாதுகாப்பாக இருக்கிறாராம். இந்தக் கதை செண்டிமெண்ட்டாக சரியாக வராது என்று அகில உலகமும் சொல்லிக் கொண்டு இருக்கிறதாம்
ReplyDeleteமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...