
நண்பனின் நண்பனும் நண்பன் என்பதுதான் இந்த படத்தின் கரு. படத்தில் சரியாக அதைச் சொல்லி பாராட்டு வாங்கி விட்டார்கள். என்னை வைத்து நீ படம் எடுத்தாய் பதிலுக்கு உன்னை வைத்து நான் படம் எடுத்தேன் என்று சாதாரண டீல் போல் இல்லாமல் இருவரும் ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைத்தது முதல் வெற்றி."சசிகுமார், சமூத்ரகனி நல்ல கூட்டணி தானுங்கோ...கடைசி வரை இப்படியே இருந்தா நல்லதுதான்..."
படத்திற்கு வருவோம்...
"ஒன்னும் பிரச்சனை இல்ல மாப்ள...100 பேர் வந்தாலும் பரவாயில்ல, பாத்துருவோம். நாங்க இருகோம்டா. அந்த பொண்ணு உன் மேல உசிரையே வைச்சிருக்கு இல்ல? நீ கூப்டா வரும்ல...விடு கல்யாணத்த நாங்க பண்ணி வைக்கிறோம்...நாங்க இருகோம்ல..." என்று வரிக்கு வரி நாங்க இருக்கோம்.. நாங்க இருக்கோம்.. என்று நண்பர்களின் காதலுக்கு உதவி செய்பவர்கள் நிறைய பேர் உண்டு.
'அவர்கள் நன்றாக வாழ்ந்தால் சரி' என்ற ஒரே ஒரு திருப்தியுடன் பட்ட சிரமங்களை எல்லாம் மறந்து சிரிப்பது தான் நட்பு. அப்படித்தான் நண்பனின் நண்பனுக்காக, அவன் காதலுக்காக உடலளவிலும், மனதளவிலும் நிறைய இழந்து ஓடி,ஓடி, போராடித் திருமணம் செய்து வைக்கிறார்கள் நண்பர்கள் சிலர். இதுவரை வந்த படங்களில் காதலர்களை பஸ்சோ டிரயினோ ஏத்தி விட்ட பிறகு 'சுபம்' போட்டு விடுவார்கள். அல்லது மிஞ்சிப் போனால் அவர்கள் போகும் வரை ஒரு பைட் இருக்கும். அவ்வளவுதான்.(2016 க்குப் பிறகு தமிழகத்தின் நிரந்தர முதல்வர், இளைய தளபதி டாக்டர் விஜய் கஷ்டமே படாமல் 25 ஜோடிகளை சேர்த்து வைக்கும் 'ஷாஜகான்' படத்தின் தீம் தான் இதுவும்.ஆனால் நிறைய வித்யாசம் இருக்கிறது. இது தான் உண்மை பாஸூ...)அப்படி அவர்களை ஏற்றி விட்ட பிறகு என்னென்ன நடக்கும் என்பதை இந்தப் படத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

சபாஷ்:

அடுத்த சபாஷ் 'கல்லூரி' பரணி. முதல் படம் போலவே இதிலும் நல்ல ரோல். பிண்ணி இருக்கிறார். டயலாக் டெலிவெரியும், முக பாவனைகளும் அற்புதம். சரளமாக 'நாங்கெல்லாம்' என்று ஆரம்பிக்கிறார். படத்தின் காமெடி கிங் இவர்தான்.


ம்...ஓகே:
கலைமாமணி, கரிசல்காட்டு நாயகன் கஞ்சா கருப்பு என்று போடுகிறார்கள். ஆனால் அந்த அளவிற்கு வேலை இல்லை. ஒரே மாதிரியான நடிப்பு. அவரை விட தனக்குத் தானே பிளேக்ஸ், கட் அவுட் வைத்துக் கொள்ளும் உள்ளூர் அரசியல்வாதி அதிக சிரிப்பை வரவைக்கிறார்...
சசிகுமார்...ஹீரோ. ஆள் பக்கத்தில் நின்றாலும் சுப்ரமணியபுரம் நினைப்பில் குதித்து குதித்து தான் சண்டை போடுகிறார். நடிப்பு, சொல்ல வேண்டியதில்லை. சிரிக்காமல் சிரிக்க வைக்கும் கேரக்டரில் நன்றாக செட் ஆகியிருக்கிறார். ஆனால் டான்ஸ்...சுத்தமாக வரவில்லை. உங்க கிட்டருந்து நிறைய எதிர்பாக்குறோம். ஹீரோவாக இல்லை. டைரக்டராக...
மற்ற நடிகர்களும் நிறைவாகவே செய்துள்ளனர்.
ஒவ்வொரு வசனமும் படத்தை தாங்கி நிற்கிறது. நட்பு, காதல், சிரிப்பு, கோபம், வெறுப்பு, பயம், வெறி என்று எல்லா இடங்களிலும் அளவான அற்புதமான வசனங்கள்.
நட்பு, காதல் இவை இரண்டையும் சொல்லும் படத்தை கண்டிப்பாக நண்பர்களுடன் ஒரு கூட்டமாக சென்று பார்த்தால் தான் நன்றாக இருக்கும். என்னைப் போல் தனியாகப் போய் பார்த்து விட்டு பின் போனில் "மச்சி, படம் பட்டாசா இருக்குடா...கண்டிப்பா பார்ரா" என்று சொன்னால் முழு பீல் கிடைக்காது.
மொத்தத்தில், நாடோடிகள் - நண்பர்கள்...
(நிறைஞ்ச மனசு படம் எடுத்தவராச்சே பாக்கலாமா வேணாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பரவில்லை நல்லாத் தான் இருக்கு. கண்டிப்பா பாருங்க...நண்பர்களோடு :-)